எத்தனை இதயங்களை நான் நேசித்தாலும்
நீ மட்டுமே என் சுவாசம்....
நான் உறங்கவேண்டும் என்பதுக்காக
எத்தனை இரவுகள் எனக்காக
நீ கண்ணுறங்கவில்லை....
இன்று மட்டும் அல்ல நீ என்றுமே
என் இதயத்தில் இதயத்துடிப்பாய்
இருப்பாய்...
மீண்டும் நீ எனக்கு அன்னையாய்
வந்திடவேண்டும்....
நான் கோவிலுக்கு போனதில்லை
நீயே ஒரு கோவில் அம்மா....

No comments:
Post a Comment