Sunday, June 12, 2011

உந்தன் அழைப்பு ....

எத்தனை தொலைபேசி அழைப்புகள் 
எனக்கு வந்தாலும்.... 
உந்தன் அழைப்பு வரும்போது மட்டும் 
என் தொலைபேசி ஒரு கணம் 
என்னை பார்த்து புன்னகைக்கிறது...
ஏன் தெரியுமா????  
தொலைபேசிக்கு தான்  புரியும் உன் அழைப்புக்காக  
நான் காத்திருப்பதின் தவிப்பு.....

Saturday, June 11, 2011

இது தான் உலகம்....

மனிதா!!!
நீ கட்டிய உல்லாச வீடு
உன் ஆடம்பர வாழ்க்கை
இவை எல்லாம் போய்விட்டன என்று
கவலைப்படுகிறாய்.... ஆனால்.....
ஒரு வேலை உணவிற்காய் அல்லல் படும்
நம் உறவுகளை பற்றி
சிந்தித்தாயா?????
இது தான் உலகம்....

உன் மௌனம்...

உன் மௌனத்தை கவி
வடிக்க நினைக்கும் போது...
என் பேனா கூட
மௌனித்திப்போகிறது....
கவி வடிக்கமுடியாமல்....

மனிதா!

மனிதா!
உன்னை நீ எப்போது
ஆராய்ச்சி செய்யபோகிறாய்????
பெட்டி பெட்டியாக பணத்தை
அடுக்கி வைத்து காவல்
செய்கிறாய் நித்திரை இல்லாமல்...
உனக்கு பணம் காவலா???
பணத்துக்கு நீ காவலா???
பக்கத்து வீட்டுக்காரன்
பட்டினியோடு  இருக்க.... நீயோ
பத்துமைலுக்கு அப்பால் இருக்கும்
கடவுளுக்கு படையல் செய்கிறாய்....
பிறப்பை அறிவிக்கும் பிறந்த நாள் முதல்
இறந்தநாள் வரை பந்தல் போட்டு
கொண்டாடுகிறாய்... இது பணம் செய்யும் வேலை தானே...
குற்றம் செய்கிறாய்
சட்டத்திற்கு முன்
உனக்கு பதிலாக
பணம் நிறுத்தப்படுகிறது...
மனிதா!!
ஒரு முறை உன்னை
ஆராய்ச்சி செய்து பார்...!!!

உன் காதல்....

நான் எழுதிய
கவிதைகள் கூட 
பொய்யாகி போய்விட்டது.....
உன் பொய்யான காதலினால்.... 

என்னோடு பேசாத அந்த பொழுதில்....

உறக்கமில்லாத இரவுகளையும்....
கனவுகள் இல்லாத தூக்கத்தையும்....
வெளிச்சமில்லாத பகலையும்.....
நான் ரசித்திருக்கிறேன் தெரியுமா உனக்கு..????
நீ என்னோடு பேசாத அந்த பொழுதில்....

அம்மா

எத்தனை இதயங்களை நான் நேசித்தாலும்
நீ மட்டுமே என் சுவாசம்....
நான் உறங்கவேண்டும் என்பதுக்காக
எத்தனை இரவுகள் எனக்காக
நீ கண்ணுறங்கவில்லை....
இன்று மட்டும் அல்ல நீ என்றுமே
என் இதயத்தில் இதயத்துடிப்பாய்
இருப்பாய்...
மீண்டும் நீ எனக்கு அன்னையாய்
வந்திடவேண்டும்....
நான் கோவிலுக்கு போனதில்லை
நீயே ஒரு கோவில் அம்மா.... 

காதல்

 கண்கள் பார்த்தவுடன் வருவது
காதல் அல்ல...
இதயம் கொடுத்து இதயம் வாங்கும்
காதல் உண்மையான காதல்...
பணம் பதவி அழகு இவை
பார்த்து வருவது காதல் அல்ல....
எல்லோரும் காதலிக்கிறார்கள்
என்பதற்காக காதலித்துவிடாதே....
யோசித்தபின் காதலி....
காதலித்தபின் யோசிக்காதே....

எடுத்து செல் என் இதயத்தை...

நேசிக்க இதயம் கேட்கிறாய் 
நானோ சுவாசிக்க வேண்டும் என 
அடம் பிடிக்கிறேன்...
எனக்கும் சேர்த்து நீ 
சுவாசிப்பாய் என்றால் 
எடுத்து செல் என் இதயத்தை...  
 
 
 
 

சிந்தித்தேன்

ஏன் நான் பிறந்தேன்
என்று சிந்தித்தபோது....
நீ எனக்காக தான் பிறந்தாய்
என்று நீ சொன்னபோது தான்
நான் சிந்தித்தேன்
பிறந்ததற்கான காரணத்தை....