உன்னை நீ எப்போது
ஆராய்ச்சி செய்யபோகிறாய்????
பெட்டி பெட்டியாக பணத்தை
அடுக்கி வைத்து காவல்
செய்கிறாய் நித்திரை இல்லாமல்...
உனக்கு பணம் காவலா???
பணத்துக்கு நீ காவலா???
பக்கத்து வீட்டுக்காரன்
பட்டினியோடு இருக்க.... நீயோ
பத்துமைலுக்கு அப்பால் இருக்கும்

கடவுளுக்கு படையல் செய்கிறாய்....
பிறப்பை அறிவிக்கும் பிறந்த நாள் முதல்
இறந்தநாள் வரை பந்தல் போட்டு
கொண்டாடுகிறாய்... இது பணம் செய்யும் வேலை தானே...
குற்றம் செய்கிறாய்
சட்டத்திற்கு முன்
உனக்கு பதிலாக
பணம் நிறுத்தப்படுகிறது...
மனிதா!!
ஒரு முறை உன்னை
ஆராய்ச்சி செய்து பார்...!!!
No comments:
Post a Comment