Thursday, March 29, 2012

கவிதைகள்

அழகாக ஆயிரம் கவிதைகள் 
எழுதினேன் உனக்காக அல்ல 
காதலுக்காகவும் அல்ல 
நினைவுகள் என் சிந்தனைகளை 
சிதறடித்த போது அவை சிந்திய 
துளிகள் தான் கவிதைகள் 

விதி

எல்லோர் விதியையும் சரியாக 
எழுதிய இறைவன்   என் விதியை மட்டும் 
மாற்றி எழுதி விட்டான்  

பிரிந்து போக துடிக்கும் உறவுக்காக

பிரிந்து போக துடிக்கும் உறவுக்காக 
பிரிய நினைக்கிறாய் என்னை விட்டு 
ஆனால் உன் மனம் உன்னை தடுக்கிறது 
பிரிந்து போ நீ என் மீது வைத்த பாசம் 
பொய்யானது என்றால் ..... 
கழட்டி விடும் செருப்பல்ல காதல் 
தேய்ந்தவுடன் புது செருப்பு வாங்குவது போல 
காதலையும் வாங்கிவிடாதே 
உண்மையான காதல் உன் மனதில் இருந்தால் 
உன்னால் காதலிக்கப்பட்ட அந்த பெண்ணை 
பாதியில் நீ பரிதவிக்க விட்டு போவது தான் 
காதல் என்றால் நீ ஏன் காதலிக்கிறாய்... 
காதலுக்காக எதையும் இழக்கலாம் 
ஆனால் எதுக்காகவும் உன் காதலை இழக்காதே 

அன்னையே

அன்னையே 
என்னை மீண்டும் உன் கருவுக்குள் 
எடுத்து விடு ... அங்கு நான் 
வாழ ஆசைபடுகிறேன் .... 
அங்கு இருக்கும் போது இந்த உலகமே 
தெரியாது ...... 
மீண்டும் என்னை உன் கருவறைக்குள் 
தாங்குவாயா 

Wednesday, March 28, 2012

கடவுளுக்கு ஒரு மனு

கடவுளுக்கு ஒரு மனு 
மனிதர்களை படைத்தாய் 
படைக்கும் போது நீ 
சிந்தித்திருகலாமே .... 
போலியான மனிதர்களை 
படைக்க கூடாது என்று.... 
அப்படி நீ படித்திருந்தாலும் 
இந்த உலகில் நீ பாசம் என்ற ஒன்றை 
படைத்திருக்கவே கூடாது 
அந்த போலியான பாசத்தால் ஏமாறி 
கண்ணீர் வடிப்போர் பலர் ..... 
அதனால் உனக்கு ஒரு மனு அனுப்புகிறேன் 
இனியாவது படைக்கும் போது 
சிந்த்தித்து படை மனிதனை 

Saturday, July 16, 2011

உன்னை.......

சுழலுகின்ற இப்பூமியில் மீண்டும்
சந்திக்கநேர்ந்தால் அப்போது மட்டும்
 என்னை பார்த்து புன்னகைத்துவிடாதே........
என் இதயம் மீண்டும் காதலிக்க
தொடங்கிவிடும் உன்னை.......

நேசித்துவிட்டேன்

உன்னை நேசித்துவிட்டேன்
என்பதால் தான் இன்று ஒவ்வொரு
கண்ணீர்த்துளிகளையும் நான்
நேசிக்க கற்கிறேன்.....